சிவகங்கை அரசு மருத்துவமனையில் - நோயாளிகள் நலனை அறிய உதவி மையம் :

சிவகங்கை அரசு மருத்துவமனையில்  -  நோயாளிகள் நலனை அறிய உதவி மையம் :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் அதிக அளவில் வருகின்றனர். இதனால் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நோயாளிகளிடம் அடிக்கடி உறவினர்கள் செல்வதால், அவர்களுக்கும் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நோயாளிகளின் நிலைக்கு ஏற்ப மருத்துவர்களின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் நோயாளிகளின் நலனை தெரிந்து கொள்வதற்காக, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள மருத்துவக் குழுவிடம் நோயாளிகளின் நலன் குறித்து உறவினர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in