குமாரபாளையத்தில் - ரூ.14 லட்சம் மதிப்பில் மின்மயானம் பராமரிப்பு :

குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
குமாரபாளையம் நகராட்சி மின் மயானத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
Updated on
1 min read

குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் ரூ.14 லட்சம் மதிப்பில் எரியூட்டு இயந்திர பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு கூறியதாவது:

குமாரபாளையம் நகராட்சி மயானத்தில் எரியூட்டு இயந்திரம், புகை போக்கி உள்ளிட்ட பல பாகங்கள் உறுதித் தன்மையை இழந்தது. இதனால், 27, 28 மற்றும் 29 ஆகிய 3 நாட்கள்மின் மயானத்தில் சடலங்களை எரியூட்டும் பணி நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது.

மேலும், மின் மயானம் தற்போது, ரூ.14 லட்சம் மதிப்பில்புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந் ததும் மீண்டும் வழக்கம் போல சடலங்கள் எரியூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in