ராசிபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு :

ராசிபுரம் அருகே சாராய ஊறல் அழிப்பு :
Updated on
1 min read

ராசிபுரம் அருகே 5 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 300 லிட்டர் ஊறலை மதுவிலக்குப் பிரிவு போலீஸார் கைப்பற்றி அழித்தனர்.

ராசிபுரம் அடுத்த கெடமலை யில் கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நாமக்கல் மதுவிலக்குப் பிரிவு இன்ஸ்பெக்டர் பூர்ணிமா தலைமையிலான போலீஸார் கெடமலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது.

மேலும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5 லிட்டர் கள்ளச் சாராயம் மற்றும் 300 லிட்டர் ஊறலை போலீஸார் பறிமுதல் செய்து அழித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சியவர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in