கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : கரோனாவுக்கு 16 பேர் உயிரிழப்பு :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் : கரோனாவுக்கு  16 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 558பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32,514பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 240 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். இதுவரையில் 27,781பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 8பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 340பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. இதுவரையில் 29,173பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை இம்மாவட்டத்தில் 129பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 580பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களைச் சேர்த்து இதுவரை 479 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in