ஈரோடு, நாமக்கல்லில் பாதிப்பு 2583 - கரோனாவிலிருந்து 1628 பேர் மீண்டனர் : 33 பேர் உயிரிழப்பு

ஈரோடு, நாமக்கல்லில் பாதிப்பு 2583 -  கரோனாவிலிருந்து 1628 பேர் மீண்டனர் :  33 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சுகாதாரத்துறை அறிக்கையின் படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று 1731 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1246 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 21 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட அளவில் தற்போது, 13 ஆயிரத்து 965 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 401 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 311 ஆகவும் உயர்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 852 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து 382 பேர் குணமடைந்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்துள்ளனர் மாவட்டத்தில் தற்போது 5823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in