கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் - கரோனாவுக்கு 15 பேர் உயிரிழப்பு :

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் -  கரோனாவுக்கு 15 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று புதிய உச்சமாக 798 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 31,954 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 526 பேர் குணமடைந்தனர். 27,541 பேர் இதுவரையில் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட் டத்தில் நேற்று 5 பேர் உயிரிழந்தனர். இதுவரை 226 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 613 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 46,137 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 570 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 38,083பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 6,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 10 பேர் உயிரிழந் துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 472 பேர் உயிரிழந் துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 448 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 19,833 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை 126 பேர் உயிரிழந் துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in