திருப்பூரில் : கரோனா தொற்றுக்கு12 பேர் உயிரிழப்பு :

திருப்பூரில்  : கரோனா தொற்றுக்கு12 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300-க்கும் மேற் பட்ட கரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினசரி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரிமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சிகிச்சை மேற்கொண்டவர்களில் 12 பேர் கரோனா தொற்றுக்கு நேற்று உயிரிழந்தனர். இவர்கள் தவிர, பல்வேறு இணை நோய் களுடன் சிகிச்சை பெற்று வந்த 39 பேர் நேற்று உயிரிழந் தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in