செங்கல்பட்டு காவல் துறை சார்பில் - முதியோருக்கு சேவை மையம் :

செங்கல்பட்டு காவல் துறை சார்பில் -  முதியோருக்கு சேவை மையம் :
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்டத்தில் முதியோருக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் சேவை மையம், காவல் கண்காணிப்பாளர் ஏ.சுந்தரவதனம் அறிவுறுத்தலின் பேரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தை 044-29540888,044 - 29540444 என்ற எண்களில்தொடர்புகொண்டு பயன்படுத்தலாம். மேலும், சமூக விரோத செயல்கள், குற்றங்கள் குறித்து தெரிவிக்க 7200102104என்ற எண்ணும் ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமையில் இருப்போர் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "எஸ்.பி.அலுவலகத்தில் செயல்படும் இந்த மையத்தில் தேவைகள், தகவல் மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து தெரிவித்தால், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாட்ஸ்-ஆப் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in