இரண்டு வீதிகளில் 26 பேருக்கு தொற்று  :

இரண்டு வீதிகளில் 26 பேருக்கு தொற்று :

Published on

திருப்பூர் மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்டது நல்லாத்துபாளையம். இங்குள்ள இரண்டு வீதிகளில் 26 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 20 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதையடுத்து இரண்டு வீதிகளும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ முகாமில் 76 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிப்பவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் மருந்து, உணவு, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in