வேலூரில் : இரு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது :

வேலூரில் : இரு சக்கர வாகனம் திருடிய இருவர் கைது  :
Updated on
1 min read

வேலூரில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய் தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான வாகனங் களை பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் வேலூர் மாநகரப் பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக வாகன உரிமை யாளர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் விருதம்பட்டு காவல் நிலையங்களில் புகார் அளித்து வந்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி யதில், இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்தது காட்பாடி அடுத்த வஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (19), விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த அருண் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in