சிவகங்கை மாவட்டத்தில் - தடுப்பூசி செலுத்தும் சதவீதம் 7.84 :

சிவகங்கை மாவட்டத்தில் -  தடுப்பூசி செலுத்தும் சதவீதம் 7.84 :
Updated on
1 min read

‘‘சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் சதவீதம் 7.84 ஆக உள்ளது. அதை உயர்த்த வேண்டும்,’’ என வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு முதன்மைச் செயலரும், கோவிட்-19க்கான கண்காணிப்பு அலுவலருமான கார்த்திகேயன் தெரிவித்தார்.

அவரும், சிவகங்கை ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியும் நேற்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரோனா கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்தனர்.

அரசு முதன்மைச் செயலர் கார்த்திகேயன் செய்தியா ளர் களிடம் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 200 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் படுகின்றனர். பரிசோதனையை ஒப்பிடும்போது பாதிப்பு 10 சதவீதமாக உள்ளது. இது குறைக்கப்பட வேண்டும்.

மேலும் திரவ ஆக்சிஜன் தேவை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அரசிடம் தெரிவித்து பெற்றுத் தரப்படும். அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்துவது மாவட்டத்தில் 7.84 சதவீதமாக உள்ளது. இதனை உயர்த்த வேண்டும். படிப்படியாக கரோனா பாதிப்பு குறையும் என்று கூறினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட் சியர் பி.மதுசூதன்ரெட்டி கூறியதாவது: 18 முதல் 45 வயதுக்குட்பட்டோருக்கு 16,600 தடுப்பூசிகள் வந்துள்ளன. அரசு உத்தரவு வந்ததும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்படவில்லை, என்று கூறினார். மாவட்ட எஸ்பி ராஜராஜன் உடனி ருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in