காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு - ஆக்சிஜன் கருவிகளை வழங்கிய சிங்கப்பூர் வாழ் மருத்துவ மாணவி :

சிங்கப்பூர் மருத்துவ மாணவி வழங்கிய  ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை  காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
சிங்கப்பூர் மருத்துவ மாணவி வழங்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதை அறிந்த சிங்கப்பூர் வாழ் மருத்துவ மாணவி ஹிரண்யா சிங்கப்பூர், சீனா, இந்தியாவில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் தாயார் நாகு ஆகியோர் உதவியுடன் 2 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்கினார். அந்த கருவிகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் பொன்னம்பல அடிகளார் மூலம் காரைக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு வழங்கினார். செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் பகீரதநாச்சியப்பன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுந்தரராமன் முன்னிலை வகித்தார். மருத்துவமனை தலைமை மருத்துவர் தர்மர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in