மாற்றுத் திறனாளிக்கு கைகொடுத்த முகக்கவசம் வியாபாரம் :

தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே மூன்று சக்கர சைக்கிளில் முகக்கவசங்கள் வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளி துரை. படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே மூன்று சக்கர சைக்கிளில் முகக்கவசங்கள் வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளி துரை. படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடி 3-ம் மைல் பகுதியைச் சேர்ந்தவர் வே.துரை (40). சுமைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் வலது கால் செயல்படாமல் போனது. இதனால் வீட்டுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அரசு சார்பில் இவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

இந்த சைக்கிள் உதவியோடு தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்கா அருகே கம்பங்கூழ், சர்பத் வியாபரம் செய்து வந்தார். இந்நிலையில் கரோனா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர் சாலையோரம் வியாபாரம் செய்ய காவல் துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். வருமானத்துக்கு வழியின்றி தவித்த அவருக்கு, முகக்கவசம் வியாபாரம் கைகொடுத்தது. நண்பர் ஒருவரிடம் ரூ.1,000 கடன் வாங்கி, அந்த பணத்தில் முகக்கவசங்களை வாங்கி தனது மூன்று சக்கர சைக்கிளில் வைத்தே வியாபாரம் செய்யத் தொடங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in