கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது :

கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது :
Updated on
1 min read

பெரம்பலூரில் அண்மையில் நிகழ்ந்த கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெரம்பலூர் திருநகரைச் சேர்ந்த விஸ்வநாதன் மகன்கள் அய்யனார்(21), சிவா(26) மற்றும் ராமராஜ்(எ) ராமராஜன்(24) ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியருக்கு எஸ்.பி நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்தார். அதன்பேரில், 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் ப. வெங்கடபிரியா நேற்று உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in