திருவெண்ணெய்நல்லூர் அருகே இரு பிரிவினர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சு வார்த்தை :

திருவெண்ணெய்நல்லூர் அருகே இரு பிரிவினர் பிரச்சினை குறித்து அமைதி பேச்சு வார்த்தை :
Updated on
1 min read

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒட்டனந்தல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஒரு சமூகத்தினரில் 3 பேரை காலில் விழ வைத்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 62 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தால் அக்கிராமத்தில் மேலும் பிரச்சினை ஏற்படாத வகையில், விழுப்புரத்தில் நேற்று அமைச்சர் பொன்முடி தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து அமைதி கூட்டம் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் மணிகண்ணன், புகழேந்தி, சிந்தனைசெல்வன் ஆகியோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூடத்தில் இரு தரப்பினரின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் பொன்முடி, அதை உடனடியாக நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார். மேலும், இரு தரப்பினரும் எவ்வித பிரச்சினையிலும் ஈடுபடக் கூடாது.

காவல்துறை சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைக்கு இரு தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதற்கு, இரு தரப்பினரும் எந்தவித பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் என அமைச்சரிடம் உறுதியளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in