விழுப்புரம், கடலூரில் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம், கடலூரில் கரோனாவுக்கு 19 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 542 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 27,249 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

நேற்று 578பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,351பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 6பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 184பேர் உயிரிழந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நேற்று 848 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து, இதுவரையில் 40,290 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் நேற்று மேலும் 13 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 416 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 341 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களைச் சேர்த்து இதுவரையில் 16,840 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in