

திருச்சி கலையரங்கம் மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் வசதிகள், படுக்கை எண்ணிக்கை ஆகியன குறித்து மருத்துவமனை முதல்வர் கே.வனிதாவிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கே.என்.நேரு கூறியது:
திருச்சி அரசு மருத்துவமனையில் தற்போது 844 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 66 சாதாரண படுக்கைகள் காலியாக உள்ள நிலையில், அனைத்து வசதிகளுடன் மேலும் 140 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், கலையரங்கம் மண்டபத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகள் 2 நாட்களில் நிறைவடையும். திருச்சி மாவட்டத்தில் ஆக்சிஜனுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லை என்றார்.
ஆய்வின்போது எம்எல் ஏக்கள் எஸ்.சவுந்தரபாண்டியன், எஸ்.ஸ்டாலின்குமார், எஸ்.இனிகோ இருதயராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
பஞ்சப்பூரில் ஆய்வு