கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ செல்போன் எண்: மன்னார்குடி எம்எல்ஏ அறிவிப்பு :

கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ செல்போன் எண்: மன்னார்குடி எம்எல்ஏ அறிவிப்பு :
Updated on
1 min read

கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா பிரத்யேக செல்போன் எண்ணை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 2 கல்லூரிகளிலும் கரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவில் இருந்து மீண்டவர்கள் வீடுகளுக்குச் சென்ற பிறகும் 15 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்து வர்கள் அறிவுறுத்தி உள்ளதால், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் 76 678 678 99 என்ற பிரத்யேக செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளைப் பெற்று பயன்பெறலாம். இந்த செல்போன் எண் மே 18-ம் தேதி(நேற்று) முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல் நாளிலேயே நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த எண்ணில் தொடர்புகொண்டு உதவிகளைக் கேட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in