காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை கரோனா சிகிச்சை பிரிவில் ஆட்சியர் ஆய்வு : உடனிருப்பவர்களை வெளியேற்ற உத்தரவு

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் ஆய்வு நடத்துகிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி. உடன் நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் ஆய்வு நடத்துகிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி. உடன் நிலைய மருத்துவ அலுவலர் பாஸ்கரன்.
Updated on
1 min read

காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனையின் கரோனா சிகிச்சை பிரிவில் ஆட்சியர் மகேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண் டார். அப்போது கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுடன் உறவினர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று கூறி அவர்களை அங்கிருந்து வெளியேற்ற உத்தர விட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படு பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் பலர் அவதியுற்று வருகின்றனர். மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்காக கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தற்காலிக கரோனா வார்டாக மாற்ற ஆட்சியர் மகேஸ்வரி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும் வார்டு பகுதியில் ஆட்சியர் மகேஸ்வரி நேற்று திடீர் ஆய்வுமேற்கொண்டார். அவர் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அங்குள்ள வசதிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். அங்கு பலர் தீவிர தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் உதவிக்கு உறவினர்கள் சிலர் இருந்தனர். உடன் இருப்பவர்களுக்கும் தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்தஉறவினர்கள் வெளியேற்றப்பட்டனர். மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய பாதுகாப்பு விதிகளை பின்பற்றி அவர்களுக்கு உரிய உதவிகளை செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in