குமாரபாளையத்தில் ஆட்சியர் ஆய்வு - முழு ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தல் :

குமாரபாளையத்தில் ஆட்சியர் ஆய்வு -  முழு ஊரடங்கு விதிமுறைகளை  முறையாக பின்பற்ற அறிவுறுத்தல் :
Updated on
1 min read

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் அரசின் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா, காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்களா என குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மருந்துப் பொருட்கள் வாங்கவும், மருத்துவமனை போகவும் மட்டுமே பொதுமக்கள் வெளியில் வருகின்றனர். மக்கள் நடமாட்டதைக் கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. காவல் துறையினர் தடுப்புகள் அமைத்து கண்காணிக் கின்றனர், என தெரிவித்தனர். அவற்றை கேட்டறிந்த ஆட்சியர் மெகராஜ் ஊரடங்கை முழுமையாக பின்பற்றும்படி அறிவுறுத்தினார். நகராட்சி ஆணையர் ஸ்டாலின்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in