மதுபோதையில் இளைஞரை கொலை செய்த உறவினர் கைது :

மதுபோதையில் இளைஞரை கொலை செய்த உறவினர் கைது :
Updated on
1 min read

மதுபோதையில்உறவினரை கொலை செய்த நபரை ராசிபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

ராசிபுரம் நகராட்சி தோட்டக்காரர் வீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன் (24). இவர் வெளியூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று வீட்டுக்கு வந்த அவர் அருகே உள்ள பொது கழிப்பிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஜெயராமனுக்கும், அவரது உறவினரான மூர்த்தி (45) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மதுபோதையில் இருந்த மூர்த்தி கத்தியால் ஜெயராமனை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஜெயராமன் உயிரிழந்தார். தகவல் அறிந்த ராசிபுரம் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in