

சேலம் மாவட்டத்தில் நேற்று 550 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் 308 பேருக்கும், நகராட்சி பகுதிகளில் ஆத்தூரில் 11, நரசிங்கபுரத்தில் 4, மேட்டூரில் 2, வட்டார அளவில், சங்ககிரியில் 28, ஓமலூரில் 26, வீரபாண்டி, அயோத்தியாப்பட்டணத்தில் தலா 23, சேலத்தில் 18, பனமரத்துப் பட்டியில் 12, காடையாம்பட்டியில் 10, தாரமங்கலத்தில் 8, மகுடஞ் சாவடியில் 6, கொங்கணாபுரத்தில் 4, மேச்சேரியில் 17, வாழப்பாடியில் 9 , ஆத்தூர், கெங்கவல்லி,நங்கவள்ளி, பெத்தநாயக்கன் பாளையத்தில் தலா 5, ஏற்காட்டில் 2, கொளத்தூரில் ஒன்று என மாவட்டம் முழுவதும் 550 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.