பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கல் :

பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கல் :
Updated on
1 min read

உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கிளை சார்பில் பொதுமக் களுக்கு நேற்று இலவசமாக முகக்கவ சங்கள் வழங்கப்பட்டன.

இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்டச் செயலாளர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார். கவுரவ பொருளாளர் வெ.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதியோர் இல்லங் களில் உள்ள முதியவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர் கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பயணிகள், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், போக்குவரத்து துறை அலுவலர்கள், போக்கு வரத்துக் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஆயிரம் பேருக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், செஞ்சிலுவை சங்க பெரம்பலூர் மாவட்ட இணைச்செயலாளர் எம்.ஜோதி வேல், மேலாண் குழு உறுப்பினர் முனைவர் த.மாயக்கிருஷ்ணன், சங்க உறுப்பினர்கள் தேவேந் திரன், ரகுநாதன், காசிராஜா, பூவேந்த அரசு, உதிரம் நாக ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in