கரோனா பரவலை தடுக்க - காவல் நிலையத்துக்கு வெளியே பந்தல் அமைத்து விசாரணை :

சூலக்கரை காவல் நிலையத்துக்கு வெளியே பந்தல் அமைத்து புகார்தாரர்களின் மனுக்களை விசாரிக்கும் போலீஸார்.
சூலக்கரை காவல் நிலையத்துக்கு வெளியே பந்தல் அமைத்து புகார்தாரர்களின் மனுக்களை விசாரிக்கும் போலீஸார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சூலக்கரை காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட போலீஸார் பணியாற்றி வருகின்றனர். கரோனா பரவல் அதிகரித்துவரும் சூழ்நிலையில், புகார்தாரர்களால் போலீஸாருக்கும், போலீஸாரால் புகார்தாரர்களுக்கும் கரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் காவல் நிலையத்துக்கு வெளியே பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

புகார் கொடுக்க வருவோர் சமூக இடைவெளியுடன் பந்தலுக்குள் அமர வைக்கப்பட்டு, ஒருவர் பின் ஒருவராக அழைக்கப்பட்டு அவர்களிடம் போலீஸார் மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: காவல் நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல தரப்பட்ட மக்கள் வருவார்கள். அதில் யாருக்கு கரோனா தொற்று இருக்கிறது என்பது தெரியாது. எனவே, காவல் நிலையத்துக்கு வெளியில் பந்தல் அமைத்து சமூக இடைவெளியுடன் புகார்தாரர்களை அமரவைத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in