யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது :

யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கடையம்,அருகே உள்ள அழக்கப்பபுரம் கிராமத்தில் 2 பேர் யானைத் தந்தம் விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

வனச்சரகர் (பொறுப்பு) பரத் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அழகப்பபுரத்தைச் சேர்ந்த கணேசன் (46), இன்பராஜ் (30) ஆகியோர், கடையம் வனச்சரகம் கோரக்கநாதர் பீட் பகுதியில் இறந்து கிடந்த யானையின் தந்தத்தை திருடிக்கொண்டு வெந்ததும், அதனை விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதைடுத்து, 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்த யானைத் தந்தத்தை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in