மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது :

மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள செந்தட்டியாபுரம் புதூர் பகுதியில் மணல் திருட்டுநடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சிவகிரி போலீஸார் சோதனையிட்டனர். அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட கரிவலம்வந்தநல்லூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் தங்கராஜ் (36), பால்வண்ணநாதபுரத்தைச் சேர்ந்த பொக்லைன் ஓட்டுநர் ராமராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். மேலும், மணல் திருட்டுக்கு பயன்படுத்திய லாரி, பொக்லைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in