விருதுநகரில் மயங்கி விழுந்த பெண் காவலர் உயிரிழப்பு :

கனிமுத்து
கனிமுத்து
Updated on
1 min read

விருதுநகரில் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பெண் காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

விருதுநகர் சூலக்கரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றியவர் கனிமுத்து (44). கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்தார்.

நேற்று காலை அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவமனைக்குச் செல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற காவலர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், காவல்துறை வாகனம் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் அங்கு கனிமுத்து உயிரிழந்தார். இவருக்கு கணவர் ராஜா, ராஜ(11) என்ற மகள் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in