தேனி அருகே போக்ஸோவில் இருவர் கைது :

தேனி அருகே போக்ஸோவில் இருவர் கைது :
Updated on
1 min read

தேனி மாவட்டம், தேவதானப் பட்டி அருகே 17 வயது பிளஸ் 2 மாணவி, பள்ளியில் இருந்து வீடு திரும்பியபோது, ஜி.உசிலம்பட்டி வினோபா நகரைச் சேர்ந்த விக்னேஷ் (20), கெங்குவார்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசன் (20) ஆகியோர் மாணவியை வழிமறித்து தொந்தரவு செய்தனர்.

மாணவியின் பெற்றோர் அவர்களைக் கண்டித்தும், மீண்டும் மாணவியைத் தொந்தரவு செய்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் தேனி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கோவர்த் தனாம்பிகை, சம்பந்தப்பட்ட இருவரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in