

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், வைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதி களிலும் மொத்தம் 69.88 சதவீத வாக்குகள் பதிவாகின. தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து நாளை வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 3 மேஜைகள் போடப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கைக்காக மொத்தம் சுமார் 250 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று சுழற்சி முறையில் தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.
நாளை காலையில் சுழற்சி முறையில் மேஜை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு மேஜைக்கும் ஒருகண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கும். முதலில்தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் முன்னணி நிலவரங் களை ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கவும் ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளன.
முன்னணி நிலவரங்கள் காலை 10 மணி முதல் வெளிவரத் தொடங்கும். முழுமையான முடிவுகள் வெளிவர நள்ளிரவு வரை ஆகலாம். கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகம் காரணமாக இம்முறை முழுமையான முடிவுகள் வெளியாக தாமதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெற்றி பெறப்போவது யார்?
முக்கிய வேட்பாளர்கள்