காவல் துறையினரின் வாரிசுகளுக்கு : கல்வி உதவித்தொகை வழங்கல் :

ராணிப்பேட்டையில் காவல் துறையினரின் வாரிசுகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கிய எஸ்.பி., டாக்டர் சிவகுமார்.
ராணிப்பேட்டையில் காவல் துறையினரின் வாரிசுகளுக்கு தமிழக அரசின் கல்வி உதவித்தொகைக்கான காசோலையை வழங்கிய எஸ்.பி., டாக்டர் சிவகுமார்.
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையினர் வாரிசுகளுக்கு ரூ.2.51 லட்சத்துக்கான கல்வி உதவித்தொகைக்கான காசோலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணிபுரிந்து வரும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர் களின் வாரிசுகளுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், பல்வேறு நிலைகளில் கல்வித்தகுதி உடைய 18 காவலர்களின் வாரிசுகளுக்கும், ஒரு அமைச்சுப் பணியாளரின் வாரிசும் கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, தேர்வு செய்யப்பட்ட காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளரின் வாரிசுக்கு கல்வி உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.2 லட்சத்து 51 ஆயிரத்துக்கான உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in