ஒக்கூர் மாசாத்தியார் : நினைவுத் தூணுக்கு மரியாதை :

ஒக்கூர் மாசாத்தியார்  : நினைவுத் தூணுக்கு மரியாதை   :
Updated on
1 min read

பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த தினம் தமிழ் கவிஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை அருகே ஒக்கூரில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்திப் பேசுகை யில், ‘சங்க காலப் பெண்பாற் புலவர் ஒக்கூர் மாசாத்தியாரை வருங்காலச் சந்ததியினரும் தெரிந்து கொள்ள வேண்டும்' என்றார்.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் நாகராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in