

வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்லும் அரசியல் கட்சியினர், முகவர்கள் மற்றும் செய்தியாளர் களுக்கு கரோனா பரிசோதனை முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நேற்று நடைபெற்றன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் தற்போது கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத் துக்குள் செல்லும் வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் செய்தியா ளர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்றும், அதில் நெகட்டிவ் முடிவு வந்தவர் கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்,
எனவே அனைவரும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஆட்சியர் நேரில் ஆய்வு
இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், சார் ஆட்சியர் வந்தனா கர்க் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.