வாக்குகளை எண்ண தொகுதிக்கு 14 மேஜைகள் : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்

வாக்குகளை எண்ண தொகுதிக்கு 14 மேஜைகள் :  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவ கங்கை, மானாமதுரை (தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன.

மே 2-ம் ேததி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப் படும். தபால் வாக்குகளை பொறுத்தவரை காரைக்குடிக்கு 3 மேஜைகள், மற்ற தொகுதிகளுக்கு தலா 4 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண 4 தொகுதிகளிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். காரைக்குடி தொகுதிக்கு 443 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 32 சுற்றுகளும், திருப்பத்தூர் தொகுதிக்கு 410 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 30 சுற்றுகளும், சிவகங்கை தொகுதிக்கு 427 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 31 சுற்றுகளும், மானாமதுரை தொகுதிக்கு 399 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 29 சுற்றுகளும் எண்ணப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in