வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் தீ விபத்து :

வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் தீ விபத்து :
Updated on
1 min read

திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே வேளாண்மை துறையின் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய வளாகம் உள்ளது. இங்கு, விதைகள் சுத்திகரிப்பு நிலையம், விதைகள் சேமிப்பு கிடங்கு, வேளாண் துறை அலுவலர் அலுவலகம், உர சேமிப்பு கிடங்கு உட்பட பல்வேறு வேளாண் துறை சார்ந்த அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேளாண் விதைகள் சுத்திகரிப்பு நிலைய கட்டிடத்துக்கு அருகில் உள்ள புதரில் நேற்று திடீரென தீப்பற்றி, மளமளவென எரியத் தொடங்கியது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, தீ மேலும் பரவாமல் உடனடியாக தடுத்து அணைத்தனர். இத னால் மிகப்பெரிய பொருட்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து திருவாரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in