மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும் : மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போட வேண்டும் :  மத்திய அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று கரோனா தடுப்பூசி போட வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெகாட்க்கு எம்.பி. அனுப்பிய கடிதம்:

கரோனா தொற்றின் பாதிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகமாக உள்ளது. பல்வேறு சிரமங்களுக்கு அவர்கள் ஆளாகி வருகிறார்கள். எனவே, போர்க்கால அடிப்படையில் கொள்கை வகுத்து மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும். இதற்காக ஒரு குழு வையும் உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in