

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியர் பூங்கொடி, கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டாட்சியராக பூங் கொடி பணியாற்றி வருகிறார். மேலும் இவர், ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ளார். இவருக்கு கடந்த ஓரிரு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது நேற்று முன் தினம் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர், திருவண் ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அலுவலகம் மூடல்
மேலும், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் உட்பட சுமார் 12 ஊழியர் களுக்கு கரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டது.
இதற்கிடையில், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக பூங்கொடி உள்ளதால், வாக்கு எண்ணும் பணிக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், புதிய தாக ஒருவரை தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.