புதுச்சேரியில் - இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு : மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

புதுச்சேரியில்  -  இரண்டாவது நாளாக முழு ஊரடங்கு :  மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்
Updated on
2 min read

புதுச்சேரியில் இரண்டாவது நாளாகமுழு ஊரடங்கு தொடர்ந்த நிலையில், சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப் பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொற்று மேலும் அதிகரிக்க தொடங்கியதால், வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 வரை என 55 மணி நேரம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதர நாட்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். இது நாளை முதல் நடைமுறைக்கு வரும். பகல் 2 மணிக்குப் பிறகு உணவு விடுதிகளில் பார்சல் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த வெள்ளிக் கிழமை இரவு 10 மணி முதல் 55 மணிநேர முழு ஊரடங்கு தொடங்கியது. தொடர்ந்து நேற்று முன்தினம் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. புதுச்சேரி நகர மற்றும் கிராமப் பகுதிக ளில் கடைகள் அனைத்தும் மூடப் பட்டன.

காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், மருந்தகம் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும்திறந்திருந்தன. பெரிய மார்க்கெட்காய்கறி கடைகள், மீன் மார்க் கெட் வழக்கம்போல் இயங்கின. அத்தியாவசிய கடைகள் திறந்திருந் தாலும், மக்கள் நடமாட்டம் குறை வாக இருந்தது. பிஆர்டிசி மற்றும் தமிழக அரசு பேருந்துகள், சில தனியார் பேருந்துகள் மட்டும் இயங்கின. பேருந்துகளில் குறைந்த பய ணிகளே பயணம் செய்தனர்.

தியேட்டர்களில் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன. பூங்காக்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.அனைத்து மத வழிபாட்டுதலங்க ளிலும் வழிபாட்டு நிகழ்வுகள் நடத்தப்படவில்லை. தேவையின்றி வெளியே சுற்றியவர்களைப் பிடித்து காவல்துறையினர் அபரா தம் விதித்ததோடு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்தனர்.

இந்நிலையில் இரண்டாவது நாளாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தொடர்ந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட் டன. தனியார் பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. தேவைக்கேற்ப ஒருசில பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலா தலங்களும் மூடப்பட் டிருந்தன. நேற்று தமிழகத்திலும் முழு ஊரடங்கு என்பதால் புதுச்சேரியில் இருந்து தமிழகப் பகுதிக்கு சென்றவர்கள் எல்லைகளிலேயே தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பப்பட்டனர். அவசர தேவைக்கு சென்றவர்கள் மட்டும் முறையான விசாரணைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

அதுபோல் புதுச்சேரிக்கு தமிழகப் பேருந்துகள் இயக்கப் படாததால் மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தேவையின்றி சுற்றி யவர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டது.

நேற்று மஹாவீர் ஜெயந்தியை யொட்டி இறைச்சிக் கடைகளை அடைக்க புதுச்சேரி நகராட்சி உத்தரவிட்டிருந்தது. இதை மீறி திறந்த 6 இறைச்சிக் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இன்று (திங்கள்கிழமை) முதல் வர்த்தக நிறுவனங்கள், கடைகளை திறக்க மாவட்ட நிர்வாகம் அனு மதித்துள்ளது. அதன்படி விலக்கு அளிக்கப் பட்டுள்ள அத்தியாவசிய தேவை களான காய்கறி, மளிகை, பழக்கடைகள், பால் பூத்துகள், மருந்து விற்பனை கடைகள் தவிர பிற வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் பிற்பகல் 2 மணிவரை மட்டுமே செயல்பட வேண்டும். அதேபோல் மதுபான கடைகளும் பகுதி நேரமே திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in