கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 441 பேருக்கு கரோனா :

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 441 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 209 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் 28,516 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 190 பேர் உட்பட 26,736 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 940 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று இருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 314 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 160 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் நேற்று வரை 17,069 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 16,056 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 898 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரு பெண் உயிரிழந்தது உட்பட இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 11,764 பேருக்கு தொற்று ஏற்பட்டு,11,222 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 534 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in