அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தல் :

அனைவருக்கும் 100 நாள்   வேலை வழங்க வலியுறுத்தல் :
Updated on
1 min read

விருதுநகரில் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் சி.ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.பூங்கோதை தொடக்க உரையாற்றினார். மாநிலச் செயலர் ஏ.வி.அண்ணாமலை சிறப்புரை யாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில், கரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி 45 வயதுக்கு மேல் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளிலும் இத்திட்டத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும்.

மேலும் 100 நாள் வேலைத் திட்டத்தில் சட்டப்படியான கூலி ரூ.273-ஐ அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in