வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி : பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு :

வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி  : பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

வாலாஜா அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்துள்ள கொளத்தேரி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கிஷோர் (10), விநாயகமூர்த்தி என்பவரின் மகன் அருண் (12). இவர்கள் இருவரும் அருகே உள்ள ஒழுகூர் ஏரியில் நேற்று பிற்பகல் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர்.

பின்னர், ஏரியில் குளிக்க முயன்றபோது நீச்சல் தெரியாமல் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அபபோது அந்த வழியாகச் சென்ற சிலர், சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து வாலாஜா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதனபேரில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிறுவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொளத்தூர் பகுதி அரசுப் பள்ளியில் கிஷோர் ஐந்தாம் வகுப்பும், அருண் 7-ம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in