நூல் வெளியீடு :

நூல் வெளியீடு  :
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரும் கரிகாலன் வரலாற்று ஆய்வு மைய நிறுவனருமான ஆதலையூர் சூரியகுமார் எழுதிய ‘வரலாம் வா நண்பா' என்ற சுயமுன்னேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி திருவாரூரில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருவாரூர் உதவி வட்டாட்சியர் கலை.காரல்மார்க்ஸ் தலைமை வகித்தார். மன்னார்குடி சமூக நல பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் அன்பழகன் நூலை வெளியிட, தொழிலதிபர் வெங்கடேசன் பெற்றுக்கொண்டார்.

நூலாசிரியர் ஆதலையூர் சூரியகுமார் ஏற்புரையாற்றினார். கொரடாச்சேரி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் கலைச்செல்வன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in