புதுச்சத்திரம் அருகே - போலி மருத்துவர் கைது :

புதுச்சத்திரம் அருகே -  போலி மருத்துவர் கைது :
Updated on
1 min read

பிளஸ் 2 படித்து விட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி மருத்துவரை புதுச்சத்திரம் போலீஸார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம் அடுத்த பேளுக்குறிச்சி காந்திநகரைச் சேர்ந்தவர் பிரகாசம் (46). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலை பட்டி கிராமத்தில் அலோபதி மருத்துவச் சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் மற்றும் அப்பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்தினர் திருமலைப்பட்டியில் ஆய்வு செய்தனர். அப்போது, பிரகாசம், மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.

விசாரணையில், நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்த பிரகாசம் அந்த அனுபவத்தின் அடிப்படையில் நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in