

வேலூரில் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த கடை உரிமையாளரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.
வேலூர் சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் தேவ்ஆனந்த்அகர்வால் (44). இவர், பிஎஸ்எஸ் கோயில் தெருவில் பேன்சி மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் தனது கடையில் அதிக வாடிக்கையாளர்களை கூட்டி அவர் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடைக்கு அபராதம் விதிப்பு
கடை உரிமையாளர் கைது
அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த தேவ்ஆனந்த்அகர்வாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.