பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை - 29,084 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது : மாவட்ட ஆட்சியர் தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை -  29,084 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது :  மாவட்ட ஆட்சியர் தகவல்
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு தலைமை மருத்துவமனை, 2 தனியார் மருத்துவமனைகள், 29 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 மினி கிளினிக்குகள் மற்றும் சிறப்பு முகாம்கள் என 70 முகாம்கள் மூலம் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 29,084 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் சுழற்சி முறையில் பணியாளர்கள் வந்து செல்ல ஏதுவாக அடையாள அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in