

``தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை” என, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக, செய்தியாளர் களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணி தீவிரமாகநடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிகமாக அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் 80 சதவீதம் பேர் முகக்கவசம் அணிந்து செல்வதை பார்க்க முடிகிறது.
கரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினமும் சராசரியாக 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏதும் இல்லை.
இன்றைய நிலவரப்படி 5,000 டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது. மேலும், திருநெல்வேலி மற்றும் மதுரையில் உள்ள குளிர்பதன கிடங்கில் தேவையான தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து நமது தேவைக்கு ஏற்ப உடனுக்குடன் எடுத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி தடுப்பூசி போடுவதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை
ஆலோசனைக் கூட்டம்