வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - சவுண்ட் சர்வீஸ் தொழிலாளர்கள் கோரிக்கை மனு :

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க பேரணியாக வந்த ஒளி, ஒலி அமைப்பு மற்றும் பந்தல் அமைப்பு தொழிலாளர் நலச்சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க பேரணியாக வந்த ஒளி, ஒலி அமைப்பு மற்றும் பந்தல் அமைப்பு தொழிலாளர் நலச்சங்கத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

அரசு விதிகளின் படி திருமணங்கள், திருவிழாக்களில் மின் விளக்கு, மேடை அலங்காரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பந்தல் அமைப்பு மற்றும் ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நேற்று ஊர்வலமாக வந்து மனு அளித்தனர். அதில், ‘‘வேலூர் மாவட்டத்தில் ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் ஏராள மானோர் வசித்து வருகிறோம். அரசு கரோனா கட்டுப்பாடுகளை விதித்ததால் நாங்கள் மீண்டும் படுகுழியில் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, திருமண நிகழ்ச்சிகளில் சவுண்ட் சர்வீஸ், மின்விளக்கு, மேடை அலங்காரம் போன்றவற்றை பாதுகாப்புடன் அமைக்க அனுமதி வழங்கவேண்டும். திருவிழாக்களில் வண்ண, வண்ண விளக்குகள், சவுண்ட் சர்வீஸ் அமைக்கவும் குறைந்தது 50 சதவீத மக்களுடன் அரசு அறிவித்த சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண் டும்’’ என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in