விபத்தில் முன்னாள் விஏஓ உயிரிழப்பு :

விபத்தில்  முன்னாள் விஏஓ உயிரிழப்பு  :
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் வசித்தவர் பொன்னு ரங்கம்(76). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவர், நேற்று முன்தினம் சேத்துப்பட்டில் இருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

வந்தவாசி சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சேத்துப்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இது குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in