வேட்டவலம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு :

வேட்டவலம் அருகே கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு  :
Updated on
1 min read

வேட்டவலம் அருகே கிணற்றில் மூழ்கி நேபாள நாட்டைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த தளவாகுளம் கிராமத்தில் நேபாள நாட்டைச் சேர்ந்த கிரேஷ்(21) என்பவர் வசித்து வந்தார். இவர், ஆவூரில் உள்ள துரித உணவு விற்பனை கடையில் பணியாற்றினார்.

இந்நிலையில், ஆவூர்–வென்னியந்தல் சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில் நேற்று முன்தினம் மாலை, நண்பர்களுடன் கிரேஷ் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராமல் கிணற்றில் கிரேஷ் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இதையறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வேட்டவலம் தீயணைப்புத் துறையினர், கிணற்றில் குதித்து கிரேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடியும் பலனில்லை. இருள் சூழ்ந்ததால், தேடும் பணி கைவிடப்பட்டது.

இதையடுத்து, தேடுல் பணி நேற்று காலை மீண்டும் நடைபெற்றது. அப்போது கிரேஷ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து வேட்டவலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in