டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு - ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு :

டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு  -  ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருட்டு :
Updated on
1 min read

காட்பாடி அருகே டாஸ்மாக் மதுபான கடையின் சுவற்றை துளையிட்டு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

காட்பாடி அடுத்த கசம் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக பணியாற்றி வரும் திருநாவுக்கரசு என்பவர் வழக்கம்போல் நேற்று பகல் 12 மணியளவில் கடையை திறந்துள்ளார். அப்போது, கடைக்குள் வெளிச்சமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தார். அங்கு சென்று பார்த்தபோது ஒரு ஆள் நுழையும் அளவுக்கு சுவற்றை துளையிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் உள்ளே புகுந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை வேறு திசையில் திருப்பி சேதப்படுத்தியதுடன் அதன் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.

கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in