விஐடி வளாகத்தில் - 1,000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை வார்டு : வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு

விஐடி வளாகத்தில்  -  1,000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை வார்டு :  வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆய்வு
Updated on
1 min read

விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் 1,000 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணியை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

வேலூர் மாவட்டத்தில் கரோனா 2-ம் அலை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 2 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், கரோனா தனி வார்டுகள் அமைக்கும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, காட்பாடி விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள இந்திரா கட்டிட வளாகத்தில் சுமார் 1,000 படுக்கைகளுடன் கூடிய வார்டு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in